என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக வேட்பாளர்"
- சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
- எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
- பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.
வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.
தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
- பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.
அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்